தனது மரணத்தை தத்ரூபமாக புகைப்படம் எடுத்த பெண் புகைப்படக்கலைஞர்..!!
அமெரிக்காவின் பெண் புகைப்படக்கலைஞர் தனது மரணத்தை தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளதை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் காம்பாட் கமெரா என்ற பிரிவில் இராணுவ வீரராக ஹில்டா கிளேடான்(22) என்பவர் பணியாற்றியுள்ளார்.
இராணுவ வீரர்கள் போர்க்கள பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அங்கு நடக்கும் நிகழ்வுகளை புகைப்படமாக எடுப்பது இந்த பிரிவை சேர்ந்த இராணுவ வீரர்கள் எடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உளள Laghman மாகாணத்தில் போர்க்கள பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்,
அப்போது, ஒரு வெடிகுண்டு தவறுதலாக வெடித்ததில், கிளேடான் மற்றும் நான்கு ஆப்கன் ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.
குண்டு வெடிப்பு காட்சியை கிளேடான் தனது கமெராவில் தத்ரூபமாக காட்சிபடுத்தியிருந்தார்.
4 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், இந்த புகைப்படத்தை அமெரிக்க இராணுவம் வெளியிடாமல் பத்திரப்படுத்தி வந்தது .
தற்போது, கிளேடானின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அமெரிக்க ராணுவம் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
Average Rating