நான் ஒரு பெண்…எனக்கு உதவுங்கள்: வினாத்தாளில் எழுதி வைத்த மாணவி..!!
Read Time:1 Minute, 15 Second
உத்திரபிரதேச மாநிலத்தில் மாணவி ஒருவர் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதால் தன்னை தேர்வில் வெற்றிபெற செய்யுமாறு விடைத்தாளில் எழுதிவைத்துள்ளார்.
நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வின் வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவி, “ நான் ஒரு பெண்.எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. எனவே தயவுசெய்து என்னை எப்படியாவது தேர்ச்சி பெற செய்யுங்கள், இல்லையென்றால் என் குடும்பத்தினர் மிகுந்த கவலையடைவார்கள்” என வினாத்தாளில் எழுதிவைத்துள்ளார்.
உத்திரிபிரதேச அரசு தேர்வுகளில் விடைத்தாள்களில் விடைக்கு பதிலாக இதுபோன்று மாணவர்கள் வேண்டுகோள் வைத்து எழுதுவது சமீபகாலங்களில் வாடிக்கையான ஒன்றாகியுள்ளது.
Average Rating