தலைவலி, எரிச்சலை போக்கும் சிரோ தாரை சிகிச்சை..!!

Read Time:11 Minute, 11 Second

201705080948361048_Headache-control-Shirodhara-treatment_SECVPFதலையில் எண்ணெயைத் தாரை போல் விழ வைப்பது, ஆயுர்வேதத்தில் பின்பற்றப்படும் புகழ்பெற்ற சிரோ தாரை என்ற சிகிச்சை முறையாகும்.
இது தலையில் ஏற்படுகிற சிறுசிறு கட்டிகள், தலைவலி, தலை எரிச்சல் போன்றவற்றுக்குச் சிறந்தது.

இம்முறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயம் ஊற்றப்படும். பொதுவாக வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. சில நேரங்களில் மூலிகை சேர்த்துக் காய்ச்சப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு புளிக்க வைக்கப்பட்ட தானியாம்லம் (தானியங்களால் செய்யப்பட்ட காடி) பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை நரம்பு நோய்கள், பித்த நோய்களைக் கொண்ட வர்களுக்குச் செய்யப்படும்.

நோயாளியைப் படுக்க வைத்துத் தைலத்தை மிதமான சூட்டில் நெற்றியில் சீராக ஊற்றி அசைக்க வேண்டும். இது தூக்கமின்மை, தலைவலி, முடி உதிர்தல் போன்றவற்றுக்கு உகந்த சிகிச்சை. இந்தச் சிகிச்சை முறை 3 நாட்கள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

தாரை :

ஆயுர்வேத சிகிச்சைகளில் மிக முக்கியமான சிகிச்சை இது. கேரளத்தில் மிகப் பிரபலமான சிகிச்சை முறை. தாரை என்று சொன்னால், உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு திரவத்தைச் சீராக விட்டுக்கொண்டிருப்பது என்று அர்த்தம். நோயாளியைப் படுக்கவைத்துக் கண்களை ஒரு துணியால் கட்டி, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து எண்ணெய்யையோ அல்லது வேறொரு திரவத்தையோ புருவ மத்தியில் சீரான வேகத்தில் விழச் செய்கிற சிகிச்சைதான் தாரை எனப்படும்.

சிரோ தாரை என்றால் தலையில் எண்ணெய், தைலம் போன்றவற்றைச் சீராக விழச் செய்வது. இதனால் மனமும் மூளையும் சீராக இயக்கப்படுகின்றன.
வாத, பித்த, கபங்களில் எந்த நோய்க்கு எந்த மருந்து தேவையோ, அந்த மருந்து தாரைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தலை மட்டுமல்லாமல் மூட்டுகளுக்கும் தாரை செய்யலாம்.

இவற்றை விவரிக்கும் தாரா கல்பம் என்று ஒரு நூலே உள்ளது. தலையில் பிராணனும் பல வர்மங்களும் உள்ளன. தலை, புலன்களின் இருப்பிடமாக உள்ளது. மனதின் ஸ்தானம் அது. ஒரு ஆலமரத்தைப் போல மூளையை ஆதாரமாகக் கொண்டு கை, கால்கள் கிளைகளாக இருக்கின்றன. புத்தி, மன உறுதி, நினைவாற்றல் போன்றவை மூளையைச் சார்ந்திருக் கின்றன. தலையில் பிராண வாயு ஆலோசக பித்தம், போதக கபம், தர்பக கபம் ஆகியவை உள்ளன. ஸத்வ குணம், ரஜோ குணம் மூளையைப் பாதிக்கின்றன. தலையில் பல வகைகளில் எண்ணெய் தேய்ப்பதற்கு மூர்த்தத் தைல சிகிச்சை என்று பெயர்.
சரகரின் அத்தியாயம்

தலையின் மகத்துவத்தை விளக்க, கீயந்த சிரசீயம் என்ற ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார் சரகர். சாலாக்யம் என்று சொல்லுகிற கண், மூக்கு, நாக்கு, காது ஆகியவற்றைக் கொண்ட தலைக்கு மருத்துவவி யலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தலைமுடியைப் பற்றிய பல சிகிச்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தியும் மனமும் தலையிலேயே உள்ளன. காக்காய் வலிப்பு எனும் அபஸ்மாரம், உன்மாதம், மதம் போன்ற நோய்கள் தலையையே சார்ந்துள்ளன.

தைலங்களை வைத்துத் தாரை செய்யலாம். பாலை வைத்துத் தாரை செய்யலாம். மோரை வைத்துத் தாரை செய்யலாம். வெப்புக்காடி எனும் தானியாம்லத்தை வைத்துத் தாரை செய்யலாம். உடலுக்குப் போஷாக்கு அளிப்பதற்குப் போஷாக்கான தைலம் மற்றும் நெய்களை வைத்துத் தாரைகள் செய்யலாம். உடலிலுள்ள கபத்தைக் குறைப்பதற்கு மோரை வைத்துத் தாரை செய்யலாம். பித்தச் சமனத்துக்கு இளநீரை வைத்தும் தாரை செய்யலாம்.

தாரை பாத்திரம் :

இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு பிடிக்கும் எவர்சில்வர் பாத்திரத்தை இதற்குப் பயன்படுத்தலாம். வாய் அகன்றதாக இருக்க வேண்டும். தாரைப் பாத்தி வெளி விளிம்பில் மூன்று துளைகளைப் போட வேண்டும். இந்தப் பாத்திரத்தை ஒரு கொக்கியில் மாட்டித் தொங்கவிட வேண்டும். இதன் உள்ளே ஐந்து அங்குலம் முதல் எட்டு அங்குலம்வரை ஆழம் இருக்க வேண்டும். அதன் அடியிலே சிறு விரல் செல்லும் அளவுக்கு ஒரு துளை இட வேண்டும்.

ஒரு கொட்டாங்கச்சியை, அந்தத் துளையின் மேலே வைக்க வேண்டும். அதன் மேலே ஒரு நூலைக் கட்டி அந்தத் துளை வழியாகத் தொங்கவிட வேண்டும். நூல் வெளியில் வராமல் இருப்பதற்கு அந்தக் கொட்டாங்கச்சியின் மேல் ஒரு கம்பைக் கட்டி வைக்க வேண்டும். பின்பு ஒரு கனமான துணியையோ, ஒரு திரியையோ அந்த ஓட்டை வழியாக இழுக்க வேண்டும். 12 அங்குலம் நீளம் உடையதாக அது இருக்க வேண்டும். தலைக்கும் அந்தத் திரிக்கும் இடையே மூன்று அங்குல இடைவெளி இருக்க வேண்டும். உயரத்தில் சிறிது ஏற்றத்தாழ்வு இருந்தால் பரவாயில்லை.

சிரோ தாரை செய்யும் முறைகள் :

இந்தச் சிகிச்சைக்கு நோயாளியைக் கிழக்கு முகமாகக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். நோயாளியினுடைய நெற்றியின் புருவ மத்தியில் கவனத்தைச் செலுத்த வேண்டும். மூச்சு எவ்வாறு போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். தலைக்கும் உடம்புக்கும் எண்ணெய் தேய்க்க வேண்டும். காதைப் பஞ்சால் அடைக்க வேண்டும். கண்களை நன்றாகப் பஞ்சை வைத்துக் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் தலையில் சேர்க்கிற எண்ணெய் கண்ணில் விழுந்து, புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோயாளி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

இளம் சூடாக இருக்கும் மருந்தைத் தாரைப் பாத்திரத்தில் விட வேண்டும். இளஞ்சூடு எப்போதும் சீராக இருக்க வேண்டும். இதைப் புருவ மத்தியில் விழச்செய்து தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்ட வேண்டும். இவ்வாறு நாற்பது நிமிடங்கள் செய்ய வேண்டும்.

முன்னெச் சரிக்கைகள் :

எண் ணெய் சூடு ஆறினால், மீண்டும் சூடாக்கி சேர்க்க வேண்டும். இத்துடன் உடலுக்கு வேண்டிய துணி, மருந்து போன்றவை தயாராக இருக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் போன்றவை உள்ள நாட்களில் இந்தச் சிகிச் சையைச் செய் யக் கூடாது. இருபது நிமிடங்கள் முதல் ஒன்றரை மணிவரை யும், இருபத்தி யன்று நாட்கள்வரை இந்தச் சிகிச்சை யைச் செய்யலாம். தாரை செய்த பிறகு ஓய்வெடுக்க வேண்டும். வெந்நீரில் குளிக்க வேண்டும். நீர் இளக்கம் ஏற்படாமல் இருக்க ராஸ்னாதி (சிற்றரத்தை) பொடியைத் தலையில் தடவ வேண்டும். கந்தர் வஹஸ்தாதி கஷாயத் தைக் கொடுக்கலாம்.

உடல் வறண்ட நிலை உள்ளவர்களுக்கு, ஒன்றரை மணி நேரம் தாரை செய்யலாம். பித்தம் அதிகரித்த நிலையிலும் ஒன்றரை மணி நேரம் தாரை செய்வார்கள். எண்ணெய் பசை கொண்ட பருத்த உடலைக் கொண்டவர்களுக்கு 45 நிமிடங் கள்வரை தாரை செய்வார்கள்.

எண்ணெய் மசாஜ் :

தாரை மற்றும் எண்ணெய் மசாஜ் செய்வதற்கு மரத்தினால் ஆன பாத்திகள் செய்யப்படுகின்றன. ஒரு ஆளைப் படுக்க வைத்து எண்ணெய் தேய்ப்பதற்கான பாத்தி செய்வதற்குப் பலவிதமான மரங்கள் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவற்றில் மாவிலங்கம், தேவதாரு, புன்னை, வேம்பு, வேங்கை, கருங்காலி, மருதம், பாதிரி போன்ற மரங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பத்தடி நீளம் உடையதாகவும், அகலம் 2.75 அடி உடையதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு நபருக்குத் தாரை செய்வதற்கு 2 லிட்டர் எண்ணெய்யாவது வேண்டும். தாரை செய்வதற்கு இரண்டு ஆட்கள் தேவை, மோர் போன்றவற்றைத் தினமும் மாற்றலாம். தேங்காய் எண்ணெய்யை 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றலாம். எண்ணெய்யை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது. வாதானுபந்த நோய்களில் எண்ணெய்யும், வாத – கப நோய்களில் மோர் தாரையும் செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று நினைக்கவில்லை: ராஜமவுலி தந்தை பெருமிதம்..!!
Next post தங்களை விட வயது குறைந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்- ஸ்பெஷல்..!!