முகம் பேரழகாக ஜொலிக்க பசுவின் கோமியம் போதுமே..!!
பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள்.
இது பல நேரத்தில் ஆபத்தை விளைவிக்க கூடியதாகும். இயற்கை முறையிலே பசுவின் பால், கோமியம் மற்றும் சாணத்தை முகத்துக்கு பயன்ப்படுத்தினால் முகம் ஜொலிக்கும் என குஜராத்தின் பசு பாதுகாப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எகிப்திய பேரழகி கிளியோபட்ரா கூட இதை பயன்படுத்தி தான் பேரழகியாக வலம் வந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தும் முறை
முதலில் பசுவின் பாலை எடுத்து முகத்தில் 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் பசு நெய் மற்றும் மஞ்சள் பொடியை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் பசுவின் கோமியத்தை வைத்து 15 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்யவும்.
கடைசியாக பசுவின் சாணம் கடைகளில் பாக்கெட்களில் செம்மைப்படுத்தி விற்கப்படுகிறது, அதை எடுத்து முகத்தில் பூச வேண்டும்.
பின்னர் வேப்ப இலை கலந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.
இதை செய்யும் பட்சத்தில் தங்க சிலை போல தேவதையாக பெண்களின் முகம் காட்சியளிப்பது உறுதியாம்.
Average Rating