ஒரே நேரத்தில் சூரியன் மறைவு – சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி : பல்லாயிரக்கணக்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!!
சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும்.
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியிலும் இன்று (புதன்கிழமை) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலையிலும் மட்டும் தான் காண முடியும்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது.
கன்னியாகுமரியில் இன்று மாலை 6.32 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மறையும்.
அதே நேரத்தில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடலில் சந்திரன் நெருப்புப்பந்து போல மேலே எழும்பும்.
இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்வையிடுவார்கள்.
இந்த நிலையில் இதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இன்றும் கன்னியாகுமரியில் கூடவுள்ளனர்.
Average Rating