இறந்த குழந்தையின் சடலத்துடன் 11 நாட்கள் வாழ்ந்த பெற்றோர்: மனதை உருக்கும் சம்பவம்..!!

Read Time:2 Minute, 27 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)எகிப்தில் உயிரிழந்த தங்கள் குழந்தையின் சடலத்தை 11 நாட்கள் உடன் வைத்திருந்த பெற்றோரின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மனைவி Ilse Fieldsend. இவர்களின் மகள் Georgia Fieldsend (3) க்கு கடந்த 2013ல் திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு தனது தாயின் மடியில் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் மருத்துவர்களிடம் Georgiaஐ காட்ட அவருக்கு மூளையில் கொடிய நோய் இருப்பதும் அவர் சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது தெரியவந்தது.

பின்னர், ஐந்து நாட்கள் கழித்து Georgia உயிரிழந்துள்ளார். ஆனால் Georgia சடலத்துக்கு அவர் பெற்றோர் உடனே இறுதி சடங்குகள் செய்ய மனமில்லாமல் 11 நாட்கள் தங்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

அப்போது நடந்த இந்த சம்பவத்தை சோகத்துடன் Ilse தற்போது உலகுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் குழந்தை சடலத்துக்கு அருகில் படுத்து கொண்டு அவள் மேல் நான் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என அழுது கொண்டே அவளிடம் கூறினேன்.

பின்னர் Georgiaவுக்கு பிடித்த உடைகள் மற்றும் ஷூக்களை அணிவித்தேன் என கூறியுள்ளார்.

பின்னர் Ilse மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் குழந்தையின் இரு பக்கத்திலும் படுத்து கொண்டு கண் கலங்கியுள்ளார்கள்.

நாட்கள் ஆக, Georgia சடலத்தின் நிறம் மாறியதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து, சடலத்தை புதைத்துள்ளனர்.

அதற்கு முன்னதாக Georgia உடறுப்புகள் எடுக்கப்பட்டு தற்போது அது ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

அதன் பின்னர், நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வசூல் செய்து அவர்களுக்கு தரும் Ilse, உடலுறுப்பு தானம் குறித்தும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் ‘லென்ஸ்’..!!
Next post விஜய் மீது போலிஸில் புகார்- இதற்கும் இளைய தளபதிக்கும் என்ன சம்மந்தம்..!!