‘பாகுபலி2’வில் இந்த சீனை பார்த்து ரம்யா கிருஷ்ணன் அழுதுவிட்டாராம்..!!
பாகுபலி படத்தின் வசூல் 10 நாட்களில் 1000 கோடியை தாண்டியதால், மொத்த வசூல் 2000 கோடியை தொடுமா என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாகுபலி மட்டுமின்றி மற்ற துணை கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது தான் என விமர்சகர்கள் சொல்கின்றனர்.
ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும்.. ஏன் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். சில சீன்களில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு அழுதுவிட்டதாக பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தை முதன்முறையாக பார்த்தபோது தனக்கு கண்ணீர் வரவைத்த சீன் எது என ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“நான் அதுவரை முழு படத்தையும் பின்னணி இசையுடன் பார்க்கவில்லை, முதல்முறையாக ஹைதராபாத்தில் முழு டீமுக்கும் ராஜமௌலி படத்தை போட்டு காட்டினார். பாகுபலியை கொன்றுவிட்டு கட்டப்பா சிவகாமியிடம் வந்து பல்வாள்தேவன் பற்றிய உண்மையை கூறிய போது, படம்பார்த்து கொண்டிருந்த எனக்கு கண்ணீர் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
Average Rating