பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு: ஏற்பட்ட விபரீதம்..!!

Read Time:1 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90இந்தியாவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு குட்டியொன்று இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ராஜ்கீயா அரசு பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது.

அந்த பள்ளியில் நேற்று மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட போது அந்த உணவில் பாம்புக்குட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அதை சாப்பிட வேண்டாம் என கூச்சலிட்டனர்.

ஆனால், அதற்குள் அந்த உணவை சாப்பிட்ட பல மாணவிகள் வாந்தி எடுத்ததோடு, மயக்கமடைந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அந்த உணவுகள் தயாரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு உடனே போன் செய்த பள்ளி நிர்வாகம் நடந்த விடயத்தை கூறியது.

இதையடுத்து அங்கு சமைத்த உணவு அனுப்பப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் உணவை அருந்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பள்ளி மாணவிகள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து..!!
Next post தினமும் 3 முறை செஞ்சா, செக்ஸ் வாழ்க்கை எப்பவும் போர் அடிக்காது..!!!