பாலியல் பலாத்கார வழக்கு: கேரள மதபோதகருக்கு ஆயுள் முடியும் வரை சிறை..!!
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கேரள மதபோதகருக்கு மற்றொரு பலாத்கார வழக்கில் ஆயுள் சிறை தண்டனை வித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே அமைந்துள்ள பீச்சி எனும் இடத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த சனில் ஜேம்ஸ் என்ற கிறிஸ்தவ மதபோதகருக்கு குறித்த தண்டனையை அங்குள்ள நீதிமன்றம் விதித்துள்ளது.
திருச்சூர் பீச்சியில் மதபோதகராக பணியாற்றும் போது 13 வயது சிறுமியை சனில் ஜேம்ஸ் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டு காலம் பல முறை சிறுமியை மிரட்டி இவர் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியே அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியான மதபோதகருக்கு ஆயுள் முடியும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக குறித்த சிறுமியின் தோழியை பலாத்காரம் செய்த வழக்கில் மதபோதகர் சனில் ஜேம்ஸ் 40 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating