இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ..!!
அக்குபஞ்சர் சிகிச்சையின் ஸ்பெஷலே உடலின் தீர்க்க ரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தான்.
அந்த வகையில் அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம் ஒருவரின் நினைவுத் திறனை அதிகரிக்க உடலின் கால் மற்றும் புருவம் ஆகிய 2 பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கால்கள்
படத்தில் காட்டியவாறு பெருவிரல் மற்றும் அதற்கு அருகில் உள்ள விரலுக்கு மேலே கையின் பெருவிரல் கொண்டு 3-4 நிமிடம் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பின் ரிலாக்ஸ் ஆன சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுத்த வேண்டும். இப்படி 4-5 முறை ஒரு நாளைக்கு செய்து வந்தால், ஒருவரின் கவனம் செலுத்துதல் மற்றும் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.
புருவங்கள்
படத்தில் காட்டியவாறு இரு புருவங்கள் முடியும் பகுதிக்கு சற்று பின்புறத்தில் நடுவிரல்களை கொண்டு 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதேபோல் ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வந்தால், கவனம் செலுத்தும் தன்மை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு, உடல் மற்றும் மனம் ரீதியாக நிம்மதியான அமைதியை பெறலாம்.
Average Rating