மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவருக்கு 7 ஆண்டு ஜெயில்: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு..!!

Read Time:1 Minute, 31 Second

courts Order (8)தஞ்சை குளிச்சப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் பிரகாஷ் (வயது 20). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறினார். இதுகுறித்து அவர் கடந்த 14.12.2015 அன்று அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரகாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணகி கார்த்திகேயன் ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதன்முதலில் என்னை சொந்த குரலில் பேச வைத்தவர் ரஜினி: ரம்யாகிருஷ்ணன்..!!
Next post பணத்துக்காகவே டி.வி. தொகுப்பாளர் ஆனேன்: கமல்..!!