வானத்தில் பறந்து சென்ற போது பசி: விமானி செய்த செயல்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
அளவுக்கு அதிகமாக பசி எடுத்ததால் மெக்டொனால்ட் கடையில் ஹெலிகொப்டரை நிறுத்தி உணவு வாங்கி சென்றிருக்கிறார் விமானி ஒருவர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மெக்டொனால்ட்ஸில் ஹெலிகொப்டர் ஒன்று நின்றிருப்பதை பார்த்த மக்கள், ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகித்துள்ளனர்.
ஆனால், அதனை ஓட்டி வந்த விமானிக்கு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது தீவிர பசி எடுத்த காரணத்தால், ஹெலிகொப்டரை மெக்டொனால்ட் கடையின் முன்னிலையில் நிறுத்திவிட்டு உணவு வாங்கியுள்ளார்.
அதன்பின்னர், வாங்கிய உணவுடன் விமானத்தில் ஏறி சென்றுவிட்டார். விமானியின் இந்த செயல் அவுஸ்திரேலிய போக்குவரத்து துறைக்கு எட்டியதைடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
Average Rating