ஆண்களை தன் பெண்ணுறுப்பை தொட வைத்து பெண் நூதன போராட்டம்..!! (வீடியோ)

Read Time:5 Minute, 10 Second

Performance-artist-arrested-for-letting-people-fondle-herஐரோப்பியாவை சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர், கற்பழிப்புகளை எதிர்த்து வினோதமான முறையில் போராடி வருகிறார். கூடுதலும் ஒரு கலை தான். ஆனால், அது முழுமனதுடன் அனுமதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டுமே தவிர, பறிக்கப்பட்டதாக, கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்க கூடாது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண்கள் அதிகளவில் கற்பழிப்பு, பாலியல் வன்முறை போன்ற சம்பவங்கள் காரணமாக தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றன.

இவற்றை எதிர்த்து பல சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஐரோப்பியாவை சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர் வித்யாசமாக தனது பெண்ணுறுப்பை ஆண்களை தொட வைத்து போராடி வருகிறார்…

மைலோ மொயரே!

மைலோ மொயரே, சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் ஒரு பெண் கலைஞி. இவரது வயது 32. இவர் பெண்களுக்கு எதிராக தவறாக நடக்கும் ஆண்களுக்கு பாடம் கற்பிக்க களம் இறங்கியுள்ளார்.

மிரர் பாக்ஸ்!

மைலோ மொயரே மிரர் பாக்ஸ் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். இதை பொதுவிடத்தில் வைத்து வினோதமான முறையில் செக்ஸ் மற்றும் கற்பழிப்பு நிகழ்வு குறித்த விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறார்.

என்ன செய்கிறார்?

>
இவர் செல்லும் இடங்களில், மிரர் பாக்ஸ்-ஐ தனது கை, கால்களில் மாட்டிக் கொள்கிறார். அதன் மூலமாக மற்ற ஆண்களை தனது மார்பகங்களையும், பெண்ணுறுப்பையும் தொட்டு பார்க்க செய்கிறார்.

கேமரா!

அந்த மிரர் பாக்ஸ் உள்ளே ஒரு கேமரா இருக்கிறது. அது கை வைக்கும் ஆண்கள் என்ன செய்கிறார்கள் என பதிவு செய்யும்.

என்ன கூறுகிறார்..?

“நான் இங்கு நின்றுக் கொண்டிருப்பது பெண் உரிமை மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த. ஆண்களை போலவே தான் பெண்களும். பெண்களுக்கு தாங்கள் விரும்பு போது மட்டும் தான் திட வேண்டும் என்ற எண்ணம், உரிமை இருக்கிறது. விரும்பாத போது தொடுவதும் பாலியல் வன்கொடுமை தான் என” மைலோ மொயரே தான் செல்லும் இடம் எல்லாம் பேசி வருகிறார்.

விதிமுறைகள்!

மைலோ மொயரே மற்ற ஆண்களை தனது மார்பு மற்றும் பெண்ணுறுப்பை தொட அனுமதிக்கிறார். ஆனால், அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. 30 நொடிகள் தான் தொட வேண்டும். அதற்கு மேல் ஒரு நொடி கூட தொட கூடாது. இதற்கு ஒப்புக்கொண்டு பல ஆண்கள் இவரை அணுகுகிறார்கள்.

பெண்களும்!

ஜெர்மனியில், மைலோ மொயரேவை மார்பக பகுதியில் தீண்டியவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாம். அம்ச்டர்டம் மற்றும் லண்டனில் இரண்டு பெண்கள் வந்து தனது பெண்ணுறுப்பை மிரர் பாக்ஸ் வழியாக தொட்டு சென்றதாகவும் மைலோ மொயரே கூறியுள்ளார்

இது புதியதல்ல…

1960-களில் பெண் கலைஞர் இதே போல ஒரு நிகழ்வை உண்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் செல்லும் இடமெல்லாம். இவருக்கு அஞ்சலி செலுத்து மரியாதை அளித்து வருகிறார் மைலோ மொயரே.

பெண்களுக்கும்!

செக்ஸ் என்பது பெண்கள் மட்டும் வேண்டுவதல்ல… பெண்கள் மட்டுமே எப்போதும் அதை வாங்கிக் கொள்பவரும் அல்ல. பெண்களுக்கும் செக்ஸ் ஆசைகள் உண்டு. அவரும் அதை கேட்டு வரலாம். ஆனால், ஆண்கள் அதைவிடுத்து கற்பழிக்க முயல்வது மனித தன்மையற்ற செயல் என மைலோ மொயரே கூறுகிறார்.

நிர்வாணமாக!

ஜெர்மனியில் புத்தாண்டு இரவன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். இதை எதிர்த்து விழிப்புணர்வு பழகை ஏந்தி முழு நிர்வாணமாக நின்று, எங்களையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என போராடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலையில் துர்நாற்றம் அடிக்கிறதா?..!!
Next post எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள முக்கிய முனை சரிந்ததாக தகவல்..!!