தேர்வெழுத வரச்சொல்லி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி இயக்குநர்..!!
Read Time:1 Minute, 27 Second
ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவியை தேர்வெழுத வரச்சொல்லி தகாத முறையில் ஈடுபட்ட கல்லூரி இயக்குநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஷிகார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியின் இயக்குநர் ராம்நிவாஸ் பிப்லோடா, அங்கு பயிலும் 21 வயது மாணவியை செய்முறை தேர்வுக்காக வரச் சொல்லியுள்ளார். தனது அறைக்கு அம்மாணவி வந்ததும், பிப்லோடா அம்மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த அவலத்தை தந்தையிடம் அம்மாணவி கூறிதையடுத்து, அம்மாணவியின் தந்தை போலீசில் சென்று புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிப்லோடா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய முயற்சி செய்தனர்.
ஆனால், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பிப்லோடா தலைமறைவாகி விட்டார். இதனால், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating