பருவம் அடையாத பெண்களுக்கு பலன் தரும் லேகியம்..!!

Read Time:1 Minute, 48 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்கள் சில பெண்களை விரைவில் பருவம் அடைந்துவிடுவார்கள்.

ஆனால் நீண்ட காலமாகியும் பருவம் அடையாத பெண் குழந்தைகளுக்கு பலன் தரும் இயற்கையில் உள்ள அற்புதமான லேகியம் இதோ!

தேவையான பொருட்கள்

வெந்தயம்
கல்கண்டு
வெண்ணெய்
காய்ந்த திராட்சை
செய்முறை

ஒரு பிடி வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தை அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும்.

பின் அந்த விழுது உள்ள அளவிற்கு, வெண்ணெய்யும், இனிப்பிற்கு தகுந்த மாதிரி கல்கண்டும் ஆகியவற்றை கலந்து வாணலியில், குறைந்த தீயில் வைக்க வேண்டும்.

மேலும் அதனுடன் ஒரு கைப்பிடியளவு காய்ந்த திராட்சை சேர்த்து, நெய் வாசனை வருகின்ற நேரத்தில் லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்தால், லேகியம் தயார்.

உட்கொள்ளும் முறை

தினமும் காலையில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உள்ள உருண்டையை சாப்பிட்டு வர வேண்டும்.

குறிப்பு

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் மற்றும் பலவீனமான பெரியவர்கள் கூட இந்த லேகியத்தை சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மைக் குறைபாட்டை தடுத்து விந்து வீரியத்தை அதிகரிக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்..!!
Next post சத்யராஜ், சூர்யா, மற்ற நடிகர்கள் பிடிவாரண்ட்டுக்கு காரணமான பேச்சு..!! (முழு வீடியோ)