என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா..!!

Read Time:2 Minute, 5 Second

201705261553465301_Happy-that-Samantha-call-me-as-uncle-says-nagarjuna_SECVPFநாகர்ஜுனா தயாரிப்பில் நாகசைதன்யா- ராகுல் பிரீத்திசிங் நடித்துள்ள ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ பட அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி நாகர்ஜுனா அளித்த பேட்டி….

“நாகசைதன்யா நடித்துள்ள இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இதில் ஜகபதிபாபு அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார். நான் இன்னும் கதாநாயகனாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்கவில்லை. சினிமாவை நான் கடவுள் போல நேசிக்கிறேன். உழைத்தால் பயன் கிடைக்கும் என்பதை ‘பாகுபலி-2’ நிரூபித்து இருக்கிறது. இது ரூ.1500 கோடி வசூலை கடந்து ஓடுவது மிகப்பெரிய சாதனை. அடுத்து இதுபோன்ற படம் எப்போது வரும் என்று தெரியாது.

எனது மகன் நாகசைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதற்கு சமந்தாவை மணக்க இருப்பது காரணமாக இருக்கலாம். சமந்தாவை எங்கள் குடும்பத்தின் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சமந்தா முன்பு என்னை ‘சார்’ என்று அழைப்பார். இப்போது மாமா என்று அழைக்கும்படி கூறி இருக்கிறேன். தெலுங்கில் அழைத்தால் ‘மாமய்யா’ என்று சொல்ல வேண்டும்.

நான் தெலுங்கு படநாயகனாக நடிக்கிறேன். ‘மாமய்யா’ என்றால் எனக்கு வயதான பீலிங் வரும். எனவே ‘மாமா’ என்று தான் அழைக்க வேண்டும் என்று சமந்தாவிடம் சொல்லிவிட்டேன். அப்படித்தான் இப்போது அழைக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்காணிப்பு அரசியல்: குழலூதும் கண்ணன்கள்..!! (கட்டுரை)
Next post கணவரின் பலநாள் கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்த மனைவி- மகன்..!!