நள்ளிரவில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: தொடரும் கொடூரம்..!!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 மணியளவில் நொய்டா பகுதியிலிருந்து புலேந்தஷர் பகுதிக்கு 4 பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது வாகனத்தை வழிமறித்து அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது.
பின்னர் காரில் இருந்த பெண்களை கடத்திச் சென்று பல மணி நேரமாக கூட்டுவன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை காப்பாற்ற முயன்ற உறவினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உத்தரப்பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது.
மேலும் இந்த நெடுஞ்சாலையில் வழிப்பறி, திருட்டு போன்ற கொள்ளை சம்பவங்களும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகின்றது.
இவையனைத்தும் நள்ளிரவு நேரங்களிலேயே நடைபெறுகிறது. இந்த குற்றசம்பவங்களை தடுக்க நொய்டா மற்றும் உத்தரப்பிரதேச பொலிசாரோ அல்லது அந்த மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 13 வயது சிறுமியும் அவரது தாயும் இது போன்று உத்தரப்பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கும்பலால் கடத்தி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating