கொழு கொழு கரீனா இரண்டே மாதத்தில் சிக்கென மாறிய அதிசயம் – நடந்தது என்ன?..!!
பிரசவத்திற்கு பின் சினிமா நடிகைகள் மட்டும் எப்படி சிக்கென்ற உடல் கட்டமைப்புடன் இருக்கிறார்கள் என்று பலருக்கும் தோன்றும்.
அந்த வகையில், சமீபத்தில் பிரசவித்த நடிகை கரீனா கபூர், இரண்டே மாதத்தில் மீண்டும் சிக்கென்று தனது பழைய உடலமைப்பைப் பெற்ற ரகசியம் என்ன தெரியுமா?
கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் சிக்கென்று மாறியதன் ரகசியம்
கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் உடலில் குறைவாக இருக்கும் கால்சியம் மற்றும் வலிமையை அதிகரிக்க தினமும் ஒரு பெரிய டம்ளர் பாலைக் குடித்து வந்தாராம்.
கரீனா கபூர் ஒரு நாளைக்கு 8 டம்ளருக்கும் அதிகமான அளவில் நீரை குடிப்பாராம். அதுவும் பிரசவத்திற்கு பின் நன்கு கொதிக்க வைத்த நீரை அதிகளவில் குடித்து வந்துள்ளாராம்.
கரீனா விரைவில் சிக்கென்று மாறியதற்கு யோகாவும் ஒரு காரணம். யோகாவால் உடல் மட்டுமின்றி, மனமும் நன்கு ரிலாக்ஸ் ஆக இருப்பதால், கரீனா சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் பின்பற்றினாராம்.
கரீனா கபூர் சுத்தமான சைவ பிரியர். இவர் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் முசிலி, சீஸ், பிரட் துண்டு, பரோட்டா, சோயா பால், சப்பாத்தி, தால், சாலட் மற்றும் சூப் ஆகியவற்றை மட்டும் சாப்பிடுவாராம்.
கரீனா 2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம். அதுவும் ஸ்நாக்ஸாக புரோட்டீன் ஷேக் மற்றும் பழங்களை மட்டுமே உட்கொண்டாராம்.
கரீனா கபூர் சிக்கென்ற உடலமைப்பை பெற, யோகா மற்றும் டயட்டுடன், கார்டியோ போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாராம்.
ஆண் குழந்தை பிறந்த பின் கரீனா கபூர் நிபுணர்களின் ஆலோசனையின் படி, தினமும் நடைப்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டாராம்.
Average Rating