கணவருக்கு ஆண்மைக் குறைவு : பளார் என்று பெண்ணை அறைந்த டாக்டர்..!!

Read Time:4 Minute, 20 Second

hand-450x249இன்று ஒரு ஊருக்கு நான்கு ஆண்மைக் குறைவு டாக்டர்கள் இருக்கிறார்கள். தவிர ஊர் ஊராகச் சென்று லாட்ஜ்களில் ரூம் போட்டு ஆண்மை நிவர்த்தி செய்யும் டாக்டர்கள் இருக்கிறார்கள்.

வீடு தேடி, ஆண்மை மருந்துகள் அனுப்பும் டாக்டர்கள், இரவு நேரங்களில் டிவிகளில் தோன்றி நடுக்கமா..முந்துகிறதா, பிந்துகிறதா என்று கேட்டு இளைஞர்களை அலறவிடும் டாக்டர்களும் இருக்கிறார்கள்.

சரி ஆண்மைக் குறைவு என்றால் என்ன..? அப்படி ஒன்று இருக்கிறதா பார்க்கலாம் நண்பர்களே..!

ஆண்மைக் குறைபாடு என்பது இன்றைய முக்கிய விவாதப் பொருள் ஆகி இருக்கிறது. காரணம் புற்றீசல் போல கிளம்பி இருக்கும் ஆண்மை வைத்தியர்கள்.

ஜீவிதா என்கிற பெண் கல்யாணம் ஆகி மூன்றே ஆண்டுகள் ஆகி இருந்தது. கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய மன நல மருத்துவரைக் காண கணவருடன் வந்திருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்து டாக்டரைப் பார்த்தார்கள். அந்த டாக்டர் இந்தியாவின் சிறந்த மனநல மருத்துவர்களில் ஒருவர்.

வந்த வேகத்தில் படபடவென பொரிந்தார். “என்னை இவருக்கு ஏமாற்றி கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். அடுத்தவாரம் டைவர்ஸ் செய்ய இருக்கிறேன். இவருக்கு ஆண்மை கிடையாது. இவர் ஆண்மகனே அல்ல”.. என்றார்.

கடுங்கோபம் அடைந்த டாக்டர் பளாரென அறைந்தார். காரணம் அவரின் உறவுக்காரப் பெண்தான் ஜீவிதா.

“உன் அவரசம் இன்னும் போகவே இல்லையா”..? என்றார். அந்த இளைஞன் கண்களில் கண்ணீர் துளிக்க தலையாட்டினான்.

அழகான பையன் அவன். கை நிறைய சம்பாதித்தான். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். பெண்ணை கொஞ்சம் வெளியே அனுப்பிவிட்டு, அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டார் டாக்டர்.

அவன் தலை குனிந்தபடி முதலிரவில் எடுத்ததுமே உடைகளை களைந்து விட்டார், என் மனைவி. நான் எதிர்பார்த்தது என் கனவு எல்லாம் தகர்ந்து போனது என்றான்.

பெண்ணை அழைத்தார். மெதுவாக.. தப்பு யாரிடம் உள்ளது என்பதைப் புரிய வைத்தார். இரண்டே கவுன்சிலிங் தான். அவர்களின் பிரச்சனை ஓவர்.

ஒரே வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானாள் ஜீவிதா. இதுதான்.. இப்படித்தான் ஆண்களின் பிரச்னைகளுக்கு மூல காரணங்கள் வெளியே தான் இருக்கிறது. புறச் சூழல்கள் மட்டுமே ஆண்மைக் குறைவுகளுக்கு காரணம்.

ஆண்மை என்பதுவெளியே இருந்து உள்ளே வருவது இல்லை. அது மனித மூளைக்குள் இருப்பது. மனித செயல் பாடுகளில் இருப்பது. சிந்தனையில் இருப்பது.

அதை எழுப்புவதில் தான் ஆண்மை, பெண்மை என்கிற விஷயங்கள். அந்த புறச் சூழலில் என்ன சிக்கல் என்பதைச் சரி செய்தாலே போதும் எல்லாம் ஓகே.

இதை மீறி அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம், புகை, போதை வஸ்துகள் பயன்பாடுகளினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சிக்கு கூட பழங்கள் காய்கறிகள்,கீரைகள், நடைப் பயிற்சி போன்றவைகள் தீர்வு கொடுக்கும்.

இது இல்லாமல் நாற்பது மண்டலம். நூறு மண்டலம், லேகியம் என்று கூறி உங்களை ஏமாற்றுவோரிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள்.

அந்த மருந்துகள் உங்கள் கிட்டினியைக் காலி செய்து விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேஜஸான முகம் பெற வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..!!
Next post அதிசயம்!! இச்சாதாரி நாகினி பாம்புகளின் நடனம்..!! (வீடியோ)