பூட்டிய அறையில் சந்தானம் ஹீரோயினுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
Read Time:1 Minute, 26 Second
நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஜோடியாக நடித்தவர் விஷாகா சிங். இவர் சினிமா நிகழ்ச்சிகளில் விடாமல் கலந்துகொள்வாராம்.
அதே போல ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் தங்கியிருந்த அறையை பூட்டிவிட்டு படவிழாவிற்கு வந்துள்ளார்.
மீண்டும் திரும்பி சென்று பார்த்த போது நகைகள், பாஸ்போர்ட் என சில முக்கிய உடைமைகள் திருடு போயுள்ளதை கண்டு விசாகா அதிர்ச்சியடைந்தார்.
இதுபற்றி ஓட்டல் நிர்வாகிகள் மூலம் போலிசில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூமில் இப்படி ஜன்னல் வழியாக திருடர்கள் உள்ளே புகுந்து கைவரிசை காட்டியது ஆச்சர்யமாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக வரும் எனக்கு இந்த வருடம் சோகத்தில் முடிந்துள்ளது என விஷாகா கூறியுள்ளார்.
Average Rating