மீண்டும் கவுரவ கொலை: மகளின் கணவனை எரித்துக் கொன்ற தந்தை..!!

Read Time:2 Minute, 3 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90ஆந்திராவில் மகளின் காதலனை எரித்துக் கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் அம்போஜி நரேஷ், இவர் கல்லூரியில் படிக்கும் போதே சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் உயர்சாதி பெண்ணான சுவாதியின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

காதலுக்கு கடும் எதிர்ப்பு எழவே சுவாதியும்- நரேசும் கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வந்துள்ளனர்.

இதுபற்றி தெரிந்ததும் சுவாதியின் குடும்பத்தார், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் கடந்த 11ம் திகதி ஆந்திரா வந்துள்ளனர், இதற்கிடையே நரேஷை காணவில்லை என அவரது தந்தை பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் சுவாதியின் தந்தைக்கு சொந்தமான இடத்தில் எரிக்கப்பட்ட உடலொன்று கிடப்பதாக தகவல் வந்தது.

பொலிசார் சென்று பார்த்ததில் அது நரேஷின் உடல் என தெரியவந்தது.

இதற்கிடையே கடந்த 16ம் திகதி சுவாதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து சுவாதியின் தந்தையிடம் விசாரணை நடத்தியதில், நரேஷை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

உடனடியாக அவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்..!!
Next post 36 ஆண்டுகளாக காதல்: ரயில் நிலையத்தை திருமணம் செய்த பெண்..!!