முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல: ரகுல்பிரீத் சிங்..!!

Read Time:2 Minute, 54 Second

201705300940194807_It-is-not-wrong-to-act-in-kiss-scenes-Rakul-Preet-Singh_SECVPFநடிகை ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமா படப்பிடிப்பு அரங்குகள் எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. தினமும் ஒரு மாணவி போலவே வந்து நடித்து விட்டுப்போகிறேன். தினமும் புதுப் புது விஷயங்களையும் கற்றுக்கொள்கிறேன். வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படாமல் கடுமையாக உழைப்பைக் கொடுக்கிறேன்.

கவர்ச்சியையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. நடிகைகள் கவர்ச்சியாக தோன்றினால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். கவர்ச்சி உடையில் நடிகைகளை தேவதைகள் போல் பார்க்க முடியும். முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல. கதைக்கு தேவை என்றால் நான் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடிப்பேன். ஆனால் அந்தக் காட்சி ஆபாசமாக இருக்கக் கூடாது.

சிலர் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக முத்தக் காட்சிகளை திணித்து படங்கள் எடுக்கிறார்கள். அதுபோன்ற முத்தக்காட்சிகளுக்கு நான் உடன்பட மாட்டேன். சினிமா எனக்கு பிடித்தமான தொழிலாக இருக்கிறது. ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கதைகளை நானே தேர்வு செய்கிறேன். நல்ல கதைகளாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. இங்கு எதையும் இழந்து விடவில்லை. சிலர் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு நடிக்காமல் இழுத்தடிப்பதாக புகார்கள் வருகின்றன.

நான் அப்படி செய்ய மாட்டேன். வெற்றி-தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு எல்லாருமே பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த படம் வெற்றி பெறும், இது தோல்வி அடையும் என்று எவராலும் கணிக்க முடியாது.

அதிக பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தோல்வி அடைந்துள்ளன. சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்கள் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன.”

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை..!!
Next post சிம்புவுக்காக மீண்டும் குரல் கொடுத்த இளையராஜா..!!