மர்மங்கள் நிறைந்த பாம்புகள் தீவு.. மனிதர்கள் உள்ளே சென்றால் ஆபத்தின் உச்சம்..!! (வீடியோ)
இந்த உலகில் மிக ஆபத்தான மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஒன்று தான் அட்லாண்டிக்கில் உள்ள பிரேசிலில் 33 கீ.மி தொலைவில் உள்ள பாம்புகள் தீவு (snaku island) சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் பரப்பளவு கொண்ட இந்த தீவில் உலகிலேயே மிக பெரிய விஷம் கொண்ட எண்ணில் அடங்காத பாம்புகள் மட்டுமே உள்ளன.
இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த தீவில் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பாம்புகள் தான் இருக்குமாம். அதிலும் குறிப்பாக உலகிலேயே அதிக விஷம் கொண்ட golden lancehead என்ற அறிய வகை பாம்பு இங்கு தான் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பாம்பு கடித்தால் ஒரு மணி நேரத்தில் உயிர் போய்விடும் என்று சொல்கிறார்கள்.
இந்த தீவில் இருந்து பாம்புகளை அகற்றிவிட்டு சாகுபடி செய்வதற்கு பிரேசில் அரசு எவ்வளவோ முயற்சித்தது ஆனால் மனித வாடையை கண்டுபிடிக்கும் அசாத்திய சக்தி இந்த பாம்புகளுக்கு உள்ளதால் இந்த முயற்சியை கைவிட்டது பிரேசில் அரசு.
சுமார் 20 லட்சம் வரை இந்த golden lancehead பாம்புகள் கள்ள சந்தையில் விலைபோவதால் இதை பிடிக்க பலர் வந்து உயிர் விடுகிறார்கள். ஆதலால் இந்த தீவை அந்நாட்டு அரசு முற்றிலுமாக மூடிவிட்டது. இந்த பாம்புகள் தீவின் காணொளி இதோ.
Average Rating