பழனி அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!
பழனி அருகே உள்ள கோதைமங்கலம் 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் கனகா (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பழனி டவுன் 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பெரியசாமி (23) பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.
இவரது அக்காவுக்கு கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் அடிக்கடி தனது அக்காவை பெரியசாமி பார்க்க வந்துள்ளார். அப்போது கனகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கனகாவின் பெற்றோர் இல்லாத நேரங்களில் அவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று கனகாவை அழைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்றார். அதன்பிறகு அவர்களை காணவில்லை.
இது குறித்து கனகாவின் தாய் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகளை பெரியசாமிதான் கடத்திச் சென்றார் என குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த பெரியசாமியையும், கனகாவையும் மீட்டனர். போலீசார் விசாரணையில் கனகாவை ஏமாற்றி பெரியசாமி பல முறை உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating