3 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை பலாத்காரம் செய்து கொலை..!!
தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவின், கிழக்கு பிரிடோரியாவில், ஒரு ஆணை ஒரு வீட்டு அறையில் அடைத்து வைத்து, மூன்று பெண்கள் உறவு வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட 3 பெண்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், 23 வயது இளைஞனை, 3 பெண்கள் சேர்ந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அவர் அந்த 3 பெண்களுடன் பல முறை உடலுறவு கொள்ள வைத்துள்ளனர். இதற்கு அந்த ஆணுக்கு பல முறை எனர்ஜி டிரிங் மற்றும் போதை மருந்து கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதோடு ஒரே அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் அந்த இளைஞன் இறந்துள்ளார்.
இதையடுத்து அவரின் உடலை கட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அந்த மூன்று பெண்களும் தப்பி சென்றுள்ளனர்.
இவர்களை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
Average Rating