பெற்ற குழந்தைகளை நண்பருக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த பெற்றோர்கள்..!!
Read Time:1 Minute, 18 Second
ஸ்பெயினில் பெற்ற குழந்தைகளை நண்பரிடம் விற்று பணம் சம்பாதித்த பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மலகாவின் கார்டமா புறநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த தம்பதிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஸ்பெயின் Mallorca தீவில் வசித்து வந்த 54 மற்றும் 59 வயதுடைய பிரித்தானியா தம்பதிகள், கடந்த 2009ம் ஆண்டு தனது மகள்களை நண்பரின் பாலியல் ஆசைக்காக விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.
இந்த வழக்கில் 2016ம் ஆண்டு இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க Mallorca தீவிலிருந்து தப்பிச் சென்று கார்டமா புறநகர் பகுதியில் உள்ள பண்ணையில் தலைமறைவாக இருந்துள்ளனர்.
இருவரையும் தீவிரமாக தேடி வந்த பொலிசார், பண்ணையில் வைத்து இருவரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
Average Rating