ராக்கி சாவந்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு..!!
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. இது வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நரேந்தர் அதியா என்ற வக்கீல் லூதியானா ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் ராக்கி சாவந்த் கோர்ட்டில் ஆஜராகும்படி லூதியானா கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஆஜராகாததால் கடந்த மார்ச் மாதம் கைது வாரண்டு பிறப்பித்தது. அந்த வாரண்டை போலீசார் ராக்கி சாவந்த் வசிக்கும் மும்பைக்கு எடுத்து சென்றபோது, அந்த முகவரில் அவர் இல்லை.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல், வால்மீகி பற்றி நடிகை தவறாக எதுவும் பேசவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.
அதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட்டு விசாவ் குப்தா, நடிகை ராக்கி சாவந்த் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்தார். அவரை ஜூலை 7-ந் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்வதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் லூதியானா போலீஸ் கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.
Average Rating