ரத்த சம்பந்தப்பட்ட நோயால் சினிமாவில் இருந்து விலகிய நடிகை..!!
Read Time:1 Minute, 11 Second
ஐஸ்வர்யா ராயை போலவே உள்ளார் என்று பலராலும் கூறப்பட்டவர் சினேகா உல்லால். இவர் கடைசியாக 2014ம் ஆண்டு அன்தா நீ மயாலோன் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 3 ஆண்டுகளாக சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் படங்களில் கமிட்டாகாதது ஏன் என்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், ரத்த சம்பந்தப்பட்ட ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம். Autoimmune disorder என்று கூறப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்டதால் தன்னால் 30 நிமிடத்திற்கு மேல் நிற்க முடியாது என்றும் நாயகிக்கு தேவையான எந்த விஷயத்தை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating