லண்டனில் தாக்குதல் நடத்திய நபரின் சந்தேக புகைப்படம் வெளியானது..!! (வீடியோ)

Read Time:1 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியா தலைநகர் லண்டன் பாலத்தின் அருகே பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரியின் உறுதிப்படுத்தப்படாத புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Gabriele Sciotto என்ற நபர் குறித்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் லண்டன் பாலம் அருகே போரோ மார்க்கில் உள்ள The Wheatsheaf பப் வெளியே தாக்குதல்தாரி வெடிக்கும் பொருளை அவரது உடலில் கட்டியபடி தரையில் படுத்திருக்க அவனுக்கு அருகே பொலிசார் ஒருவர் நிற்கின்றார்.

சிறிது தூரத்தில் இன்னொருவன் தரையில் படுத்திருக்க பொலிசார் அருகில் இருக்கிறார். இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஐந்து பேர் கொண்ட தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்: மனதை உருக்கும் சம்பவம்..!!
Next post கண்கள் பேசும் இந்த பாஷை தெரியுமா?.. அவசியம் தெரிஞ்சி வைச்சிக்கோங்க..!!