மறுமணம் செய்ய முடிவெடுத்த தந்தை: தடுப்பதற்காக மகள் செய்த மோசமான செயல்..!!
ஹாங்காங்கில் தனது தந்தை மறுமணம் செய்வதை தடுக்க அவருடன் மகள் உறவு கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் 26 வயதான ஒரு பெண் வசித்து வருகிறார். அப்பெண்ணுக்கு 19 வயதாகியுள்ள நிலையில் அவரின் தந்தை மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தனது தந்தையே எல்லாம் என நினைத்திருந்த மகளுக்கு இது அதிர்ச்சியை கொடுக்க திருமணத்தை தடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, தனது தந்தையுடனேயே அவர் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்த பழக்கம் பின்னர் நிலைத்து நீடிக்க ஆரம்பித்த நிலையில் அப்பெண்ணின் சகோதரர் மூலம் தற்போது இந்த விடயம் வெளியில் தெரிந்துள்ளது.
தந்தை மற்றும் மகளின் தவறான உறவை பெண்ணின் சகோதரர் வீடியோ எடுத்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.
பின்னர், இது குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
தங்களது தவறை தந்தையும், மகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். வழக்கு குறித்து நீதிபதி கூறுகையில், அந்த பெண்ணை கைது செய்வதாலோ அல்லது தண்டிப்பதாலோ சமூகத்துக்கு எந்த வித பயனும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும், அப்பெண்ணுக்கு மன நல சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையில், எனது தந்தை மீதிருந்த அன்பு, காமம், பக்தி தான் இந்த முடிவுக்கு நான் வரக் காரணம் என மகள் கூறியுள்ளார்.
மேலும், இந்த தவறுக்காக தனது தந்தையை தண்டிக்க வேண்டாம். இதற்கு நான் காரணம் எனவும், தன்னை மட்டும் தண்டிக்குமாறு அப்பெண் கோரிக்கை வைத்துள்ளார்.
Average Rating