எல்லோரும் கிண்டல் செய்யும் டி.ஆர் கல்லூரியில் எத்தனை கஷ்டப்பட்டார் தெரியுமா? மேடையே அழுத தருணம்..!!
டி.ஆர் என்றாலே ஒருவித எனர்ஜி வரும். அந்த அளவிற்கு அவர் ஸ்கிரீனில் தோன்றினால் தன் அனல் பறக்கும் வசனத்தால் கவர்வார்.
ஆனால், எப்போதும் அவரை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து தான் பார்த்திருப்போம், இவர் தன் கல்லூரி காலங்களில் பட்ட கஷ்டம் யாருக்காவது தெரியுமா?, அதை அவருடைய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.
டி.ஆர் அவர்களுக்கு அறிவை தவிர சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லையாம், கல்லூரிக்கு எல்லோரும் பேண்ட் அணிந்து வந்தால் அவர் மட்டும் வேஷ்டி அணிந்து வருவராம்.
ஏன் நீ மட்டும் வேஷ்டி அணிந்து வருகிறாய் என்று நண்பர் கேட்க அதற்கு டி.ஆர் ‘பேண்ட் அணிந்தால் செருப்பு போட வேண்டும், பேண்ட் அழுக்கானால் திருப்பி போட முடியாது.
ஆனால், வேஷ்டி அப்படியில்லை, என்னிடம் செருப்பில்லை, அதை மறைக்க வேஷ்டி கட்டுகிறேன், வேஷ்டி ஒரு பக்கம் அழுக்கு ஆகினால் திருப்பி கட்டிக்கொள்வேன்’ என கூறினாராம்.
இதைக்கேட்ட போது அங்கிருந்த பல இளைஞர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
Average Rating