படுக்கையில் கோபமாக படுத்திருந்த பாம்பு: அதிர்ச்சியடைந்த பெண்..!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று அவரின் படுக்கையில் மிகவும் கோபத்துடன் இருந்ததை கண்டு அப்பெண்மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Nebraska மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது பணி முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று இவரது படுக்கையில் மிகவும் கோபமாக படுத்திருந்துள்ளது, அதனை கண்டு அதிர்ச்சியடைந்த இவர், அதனை விரட்ட முயற்சிக்கையில் அது கோபமாக சீறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி இவர், பொலிசாரின் உதவியுடன் அந்த பாம்பினை தனது வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். இவரது வீடு ஏரிக்கு அருகில் இருப்பதால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதை புகைப்படம் எடுத்த பொலிசார் அதனை தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Average Rating