பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி: அதிர்ந்துபோன உரிமையாளர்..!! (வீடியோ)
மெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த அறையில் ஜாலியாக உலாவிட்டு, பியானோவை வாசித்து சந்தோஷமாக இருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதை பார்த்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வீட்டு உரிமையாளர் வீடு திரும்பியவுடன் தனது வீட்டின் சமையலறை குப்பையாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்ககூடும் என பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
வீட்டுக்கு வந்து சோதனையிட்ட பொலிசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெராவை சோதனை செய்ததில், அந்த குற்றவாளி திருடன் கரடி என தெரியவந்துள்ளது.
வீட்டின் வெளி அறையில் ஜாலியாக உலாவிய கரடி அங்கு இருந்த பியானோவில் கையை வைத்து வாசித்துள்ளது, அதன் பின்னர் அங்கிருந்த சமையலறைக்கு சென்று, அவற்றையெல்லாம் சூறையாடியுள்ளது.
இவை அனைத்தும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்துள்ளது. சமையலறையில் உள்ள ஜன்னலானது அளவில் பெரியதாக இருந்ததால் அதன் வழியாக கரடி வந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating