காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கண்ணகி வேடத்தில் வந்த நர்ஸ்..!!

Read Time:1 Minute, 54 Second

201706071554562559_woman-complaint-against-boyfriend_SECVPFமதுரை செல்லூர் சுய ராஜ்யபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி (வயது 28). தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்ஆக பணியாற்றி வரும் இவர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் சிலம்புடன் கண்ணகி வேடத்தில் வந்தார்.

அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், கோவலன் நகரை சேர்ந்த மோகன் ராஜ் மகன் கார்த்திக் என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதால் நெருங்கி பழகினேன். இதில் 2 முறை கருவுற்றேன். பின்னர் அவர் சொன்னதால் கருவை கலைத்தேன்.

தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டால் கார்த்திக் மறுப்பதோடு கொலை மிரட்டலும் விடுக்கிறார். இது தொடர்பாக செல்லூர், தல்லாகுளம் போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து கார்த்தியுடன் சேர்த்து வைத்து உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறிப்பிட்டுருந்தது.

கண்ணகி வேடத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண்ணால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா..!!
Next post ‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்?..!!