3 மணிநேரத்தில் சளித்தொல்லையில் இருந்து விடுபட இதோ தீர்வு..!!
சளி பிடித்து விட்டாலே தொண்டை வலி, தலைவலி போன்ற ஒருவித அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். அது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட வெறும் மூன்று மணிநேரத்தில் அற்புத தீர்வினைக் காணலாம்.
சளித்தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
சுடுநீரில் 6-8 டேபிள் ஸ்பூன் துருவப்பட்ட இஞ்சி, தேவைப்பட்டால் சிறிதளவு இலவங்கப்பட்டை, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து, 10 நிமிடங்கள் கழித்து குடிக்க வேண்டும்.
மஞ்சள் மற்றும் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஆகிய இரண்டையும் கலந்து அதில் தேவையான அளவு நீர் சேர்த்து, அதனை நெற்றி மற்றும் மூக்கில் தடவ வேண்டும்.
நெஞ்சு சளியை குணமாக்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து சுட வைத்து, பின் அதை நெஞ்சில் தடவ வேண்டும்.
கொள்ளு பயிறு சூப் வைத்து குடித்து வந்தால், கரைக்க முடியாத நெஞ்சு சளியை கூட குணமாக்கலாம்.
தேனில் விட்டமின் C உள்ளதால், அதில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட, அடிக்கடி உண்டாகும் சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
Average Rating