தன் வீட்டு சுவற்றில் நாய் சிறுநீர் கழித்ததற்காக பெண் மீது ஆசிட் வீசிய காவலர்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னுடைய வீட்டுச்சுவரில் நாய் சிறுநீர் கழித்ததற்காக அந்த நாயை வளர்த்த பெண் மீது ஆசிட் வீசிய காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் உள்ள சித்தேரா கிராமத்தில் வசிக்கும் 40 வயதான பெண் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர் ஆசிட் வீசியுள்ளார். இதனையடுத்து, அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பெண் வளர்க்கும் நாய் அருகிலுள்ள காவலர் ஒருவரின் வீட்டுச்சுவரில் சிறுநீர் கழித்துள்ளது. இதனையடுத்து, அந்தக்காவலருக்கும் பெண்ணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் சமாதனாப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், முன்பகை காரணமாக அந்த காவலர் தான் பெண் மீது ஆசிட் வீசியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனடிப்படையில், காவலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Average Rating