பாட்டு கேட்டு கொண்டு தண்டவாளத்தை கடந்த பெண்: நேர்ந்த விபரீதம்..!! (வீடியோ)
ரயில் தண்டவாளத்தை பாட்டு கேட்டு கொண்டே கடக்க முயன்ற இளம் பெண் மீது ரயில் மோதியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கொண்ட நிலையில், இதுபோல யாரும் செய்யாதீர்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 13ஆம் திகதி Pratiksha Natekar (19) என்ற இளம் பெண் செல்போன் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டு கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்போது தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் Pratiksha மீது மோதியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி-யில் பதிவான இந்த காட்சி இணையத்தில் வைரலானது.
NDTV தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள Pratiksha, ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது யாரும் காதில் ஹெட் போன் மாட்டி கொள்ளாதீர்கள்.
அதே போல ரயிலில் ஏறும் போது அல்லது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போதும் யாரும் இந்த செயலை செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரயில் தண்டவாளத்தை கடப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும்.
மும்பை நகரில் உள்ள ரயில் நிலையங்களில் மட்டும் இதுபோன்ற சம்பங்களால் தினமும் 9 பேர் உயிரிழக்கிறார்கள் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Average Rating