உயிருடன் இருக்கும் கழுதையை இரக்கமின்றி புலிக்கு இரையாக்கும் கொடூரம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 20 Second
ஜியாங்சு மாநிலத்தில் யான்செங் ‘சஃபாரி பார்க்’ விலங்கியல் பூங்காவில். சில ஊழியர்கள் ஒரு கழுதையை புலிகள் அடைக்கபட்டு இருந்த பகுதிக்குள் தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
நீரில் இருந்த அந்தக் கழுதை மீது புலிகள் பாய்ந்து அதனைக் கடித்துக் குதறின. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு கழுதை உயிரிழந்தது. அந்த ஆடவர்கள் ஆடு ஒன்றையும் புலிகளிடம் தள்ள முயன்றதாகவும் சுற்றியிருந்தவர்கள் அவர்களைத் தடுத்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விலங்கியல் பூங்கா முதலீட்டாளர்களுக்கும் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் ஊழியர்கள் இவ்வாறு செய்ததாக விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது. நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பலர் சம்பவம் குறித்துத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Average Rating