சசிகலாவுடன் சேர்ந்து தீபக் சொந்த அத்தையை கொலை செய்துவிட்டார்… புயலாய் கிளம்பிய தீபா..!! (வீடியோ)
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு தீபாவும் அவரது சகோதரரும் சொந்தம் கொண்டாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனுக்கு வந்த தீபாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர்.
இந்நிலையில் தீபாவை அத்தை ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு தீபக் அழைத்துள்ளார். தீபக் அழைத்ததன் பெயரில் போயஸ் கார்டன் சென்ற உள்ளே அனுமதிக்காமல் தாக்கியுள்ளனர்.
இதனால் தனக்கும், தன்னுடைய கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சசிகலாவுடன் சேர்ந்த தனது சொந்த அத்தையையே கொலை செய்துவிட்டார் தீபக் எனவும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
போயஸ் கார்டன் படையெடுத்த தீபாவின் புயலால் அங்கு பதற்றநிலை காணப்படுகிறது.
Average Rating