தெலுங்கானாவில் இளம்பெண்ணை கற்பழித்த வன ஊழியர்கள் 2 பேர் கைது..!!
Read Time:1 Minute, 6 Second
தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் முசலம்பென்டா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலுப்பை பூ பறிப்பதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனஊழியர்கள் இளம்பெண்களை பின்தொடர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தனர். 2 பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு பெண் மட்டும் வனஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார். அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வன ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.
Average Rating