பெண்ணை பூட்டி வைத்து பாலியல் சித்திரவதை: ஆபத்தான நிலையில் மீட்பு..!! (வீடியோ)
அமெரிக்காவில் 7 பேரை கொலை செய்த குற்றத்திற்காக கைதாகியுள்ள நபரால் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளான பெண்ணை பொலிசார் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் கப்பலில் சரக்கு அனுப்ப பயன்படுத்தும் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைத்து கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி வந்த பெண்ணை பொலிசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
30 வயதான அந்த பெண், பொலிஸ் பிடியில் உள்ள கொலை குற்றவாளி ஒருவரால் கடத்தப்பட்டு கடந்த 2 மாதங்களாக பாலியல் அடிமையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
Todd Kohlhepp என்ற அந்த நபர் 7 கொலை உள்பட பல்வேறு கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து, பெண் ஒருவர் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பெண்மணியை மீட்டுள்ளனர். கழுத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அவரை பொலிசார் மீட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதிமன்ற விசாரணையின் போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அரிசோனா மாகாணத்தில் ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்த Todd Kohlhepp கடந்த 2001 ஆம் ஆண்டு கரோலினா பகுதிக்கு குடியேறியுள்ளார்.
கரோலினா பகுதியில் குடியேறிய பின்னர் 7 கொலைகள் செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் தமக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என Todd Kohlhepp சதித்துள்ளார்.
Todd Kohlhepp தமது 15-வது வயதில் துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று Todd Kohlheppகு எதிராக காணொளி ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Average Rating