கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவியை குத்தி கொன்றேன்: கைதான கணவர் வாக்குமூலம்..!!

Read Time:3 Minute, 43 Second

201706121618051810_Salem-wife-murder-husband-arrest-police-investigation_SECVPFசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51) பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவகாரத்து பெற்றனர்.

இதையடுத்து செல்வராஜ் 2-வதாக தாரா (41) என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். தாரா வீரகனூர் பஸ் நிறுத்தத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வராஜூக்கும் தாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

இதையடுத்து செல்வராஜ் நேற்று தாராவின் வீட்டிற்கு சென்றார். அங்கு கணவன் -மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாராவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தாரா ரத்த வெள்ளத்தில் அலறியபடி சரிந்து விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாரா வரும்வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரணை நடத்தி தாராவை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் செல்வராஜ் பரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனது 2-வது மனைவி தாராவுக்கும் அவரது தங்கை கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரை பலமுறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் மகளிர் போலீசில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தாரா புகார் கொடுத்தார். இதையடுத்து நானும், தாராவும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தோம்.

ஆனால், அவர் இவ்வளவு பிரச்சனை நடந்தும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரது வீட்டிற்கு சென்று ஊர் மக்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்துகிறாயா என்று கேட்டேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு அவரை கத்தியால் குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி..!!
Next post யூடியுபை கலக்கும் இரண்டு குழந்தைகளின் வைரல் காணொளி!! நீங்களும் சேர்ந்து ரசியுங்கள்..!! (வீடியோ)