ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை..!!
Read Time:1 Minute, 15 Second
நடிகர் ரோபோ சங்கர் இன்று பலரால் கவனிக்கப்படும் முக்கிய பிரபலமாக மாறி வருகிறார். டிவி நிகழ்ச்சியில் தன் காமெடி திறமையை காட்டி வந்த இவர் இன்று பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.
படங்களிலும் அடுத்தடுத்து கமிட்டாகி வரும் இவர் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த காமெடி நடிகைக்கான விருது கோவை சரளாவுக்கு கொடுக்கப்பட்டது.
அப்போது மேடையில் பேசிய சரளா ரோபோவை பார்த்து உங்களது பெயரை சொல்லி திரையில் முகம் வந்ததுமே பின்னால் இருப்பவர்கள் பலமாக கைதட்டி வருகிறார்களே.
ஏதும் டிங் டிங் டிங் ( காசு காசு) கொடுத்திருக்கிறீர்களா என கேட்க உடனே ரோபோ ரஜினி ஸ்டைலில் இது அன்பால் தானா சேர்ந்த கூட்டம் என சொன்னது அனைவரையும் சிரிக்க வைத்தது.
Average Rating