கேரட்டுடன் பால்.. முகத்தில் தடவுவதால் ஏற்படும் மாற்றங்கள்..!!
சிறிதளவு கேரட்டை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊறவைத்து நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் இரவில் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை காண்போம்.
பொலிவான முகம்
கேரட் மற்றும் பால் சேர்த்த கலவையில் உள்ள விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், சரும செல்களுக்கு ஊட்டமளித்து சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
முகப்பருக்கள் நீங்கும்
தினமும் இரவில் கேரட் மற்றும் பாலை ஒன்றாக கலந்து மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை சுத்தமாக்குகிறது.
இளமை தோற்றம்
கேரட் மற்றும் பால் கலந்த கலவை சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் வராமல் தடுக்கிறது.
சரும வறட்சி நீங்கும்
சருமம் வறட்சி அதிகம் உள்ளவர்கள் கேரட், பால் கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மை தன்மையை அதிகரிக்கிறது.
சரும அரிப்பு நீங்கும்
வெயில் காரணமாக ஏற்படும் கருமை, அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்கள் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
முகத்தின் முடி நீங்கும்
முகத்தில் உள்ள தேவையில்லாத முடியினை நீக்க, கேரட் மற்றும் பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
Average Rating