மானை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு: மீண்டும் வெளியில் துப்பிய பயங்கர காட்சி..!! (வீடியோ)
இந்தியாவில் மலைப்பாம்பு ஒன்று மானை உயிரோடு விழுங்கிய நிலையில், வயிற்றில் செரிக்க முடியாததால் வெளியில் வாந்தி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் Sawantwadi பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று காலையில் மலைப்பாம்பு ஒன்று மானை அடித்து அப்படியே வாயில் போட்டு விழுங்கியது.
வயிற்றின் உள்ளே போன மானை செரிக்க முடியாமல் திணறிய மலைப்பாம்பு, அங்கும் இங்கும் நெளிந்து கொண்டிருந்தது.
பின்னர், வயிற்றிலிருக்கும் மானை வாந்தி எடுக்க முயற்சித்த மலைப்பாம்பு சில நிமிடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு மானை வெளியில் தள்ளியது.
அதன் பிறகு அசையாமல் இருந்த மலைப்பாம்பு உயிருடன் இருக்கிறதா என சோதிக்க கொம்ப்பை வைத்து அங்கிருந்த கிராம பாம்பை குத்தி பார்த்துள்ளனர்.
இதையடுத்து மலைப்பாம்பு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது.
இந்த காட்சியை கிராம மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில் வைரலாகியுள்ளது.
Average Rating