பழிக்குப்பழி வாங்க மகளை கற்பழித்தவரின் தாயார் கற்பழிப்பு – 3 பேர் கும்பல் கைது..!!
முசாபர்நகரில் உள்ள போபா போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
சில தினங்களுக்கு முன் அந்த ஊரைச் சேர்ந்த சியாமா என்ற இளம் பெண்ணை சில வாலிபர்கள் கடத்தி சென்று கற்பழித்தனர். இந்த சம்பவத்தில் சுகாஷ் என்ற வாலிபர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பிறகு சுகாசும் அவரது நண்பர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சியாமா கற்பழிக்கப்பட்டதால், அவரது தந்தை கடும் வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்.
தன் மகள் கற்பழிக்கப்பட்ட கொடூரத்துக்கு அதே பாணியில் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று துடித்தார். இதற்காக அவர் குற்றவாளிகளின் குடும்பத்தை கண்காணித்தார். அப்போது சுகாசின் தாய் பெரும்பாலும் வீட்டில் தனியாக இருப்பது தெரியவந்தது.
எனவே சுகாசின் தாயை கற்பழித்து பழி தீர்த்துக் கொள்ள அவர் திட்டமிட்டார். கடந்த திங்கட் கிழமை இரவு அவர் தன் கூட்டாளிகள் 2 பேருடன் சுகாஷ் வீட்டுக்குள் புகுந்தார்.
அங்கிருந்த சுகாசின் தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்களது கொடூரம் தாங்காமல் அந்த பெண் அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சியாமாவின் தந்தை உள்பட மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். தர்ம அடி வாங்கிய அவர்கள் பிறகு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் முசாபர்நகர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி வன்முறை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போபா கிராமத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating