பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!!
தமிழ்நாட்டில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறையை சேர்ந்தவர் நாகராஜ், கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.
இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர், மூத்த மகள் தந்தையுடன் சேர்ந்து கூலித் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது இரவு நேரம் என்பதால் மகளை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார்.
இதை கண்ட நாகராஜின் மனைவி கூச்சலிட நாகராஜ் தப்பி ஓடிவிட்டார்.
சில நாட்களுக்கு கழித்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர் மகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என கூறி அழைத்து சென்று மணப்பாறையில் உள்ள விடுதியில் தங்க வைத்துள்ளார்.
அங்கு மகளை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், எப்படியோ தப்பி வந்த சிறுமி தாயிடம் விவரத்தை கூற பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நாகராஜை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating