திருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..!!
திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கஸ்தூரி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 27). பட்டதாரி பெண். இவருக்கும் வடமதுரை அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11.4.2016-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை, ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான ஒரு மாதத்திலேயே மகாலெட்சுமியின் நகை பணம் அனைத்தையும் லிங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டு மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.
வரதட்சணை வாங்கி வராததால் மகாலெட்சுமியை அடித்து சித்ரவதை செய்து சாப்பாடு தராமல் தனி அறையில் அடைத்து வைத்தனர். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating