வெட்ட வெளியில் சிங்கத்தை அழைத்துச் சென்ற நபர்: அச்சமடைந்த மக்கள்..!! (வீடியோ)
பாகிஸ்தானில் வெட்ட வெளியில் சிங்கம் ஒன்றை காரில் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போக்குவரத்து மிகுந்த வீதியில் கடந்த புதன் கிழமை சிங்கம் ஒன்று காரின் பின் புறத்தில் வெட்ட வெளியாக வைத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
அப்போது காரில் இருந்த சிங்கம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மக்களை பார்த்து கர்ஜித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடனே சென்றுள்ளனர்.
இதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலானதால், பாகிஸ்தான் பொலிசாருக்கு இது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்த பொலிசார், எந்த பாதுகாப்புமின்றி சிங்கத்தை வெட்ட வெளியில் அழைத்துச் சென்ற நபரை கைது செய்தனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சிங்கத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவர்கள் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்பு இன்றி அழைத்துச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்துள்ளோம். மேலும் சிங்கம் யாருடையது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating