தேன்கனிக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை அரிவாளல் வெட்டிய மனைவி..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே உள்ள மேல்கதவணி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 30). இவருக்கு சிட்டம்மா என்ற மனைவி உள்ளார்.
மாதேவனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை திட்டியுள்ளார். மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி போதையில் பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாதேவன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகபட்டு பேசி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிட்டம்மா அருகில் இருந்த அரிவாளை எடுத்து மாதேவனின் தலையில் பின்புறமாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அரிவாளால் வெட்டப்பட்ட அவர் வலியால் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாதேவன் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனை அரிவாளல் வெட்டி தப்பி ஓடிய சிட்டம்மாவை தீவிர தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating